– Inshira Ifham
ஒர் இளைஞன் இன்ஜினியர் faculty இற்கு தெரிவு செய்யப்படுகின்றார்.
நான்கு வருட கற்கை . இவர் தனது பல்கலைக்கழக வாழ்வில் ஒவ்வொரு நாளும் பஜ்ருத் தொழுகையின் பின்னர் அல்குர்ஆனில் ஐந்து வசனங்களை மனனம் செய்கின்றார்.
அன்றைய நாளுக்குரிய தொழுகைகளில் அந்த வசனங்களை ஓதுகின்றார். ஒவ்வொரு வெள்ளியன்றும் ஒர் உஸ்தாதை சந்தித்து அந்த வாரம் மனனம் செய்தவற்றை ஓதிக் காட்டுகிறார். நான்கு வருட கற்கை முடியும் போது முழுக் குர்ஆனையும் மனனம் செய்த ஹாபிழ் உம் அவர் இன்ஜினியரும் அவர்.
ஆக அல்குர்ஆனை மனனம் செய்ய மத்ரஸா ஒன்றில் சேர வேண்டிய எந்தத் தேவைப்பாடும் இல்லை. மத்ரஸா போறவர்கள் மாத்திரம் தான் குர்ஆனை மனனம் செய்ய வேண்டும் என்றுமில்லை. நான் இன்ஜினியரிங் செய்றேன் எனக்கு இதற்கெல்லாம் நேரம் இல்லை என அந்த இளைஞர் சோம்பிப் போகவில்லை.
நாமலும் ட்ரை பண்ணலாமா?? .
அம்ம ஜுஸு விலிருந்து ஆரம்பிக்கலாம்.
சுபஹ் தொழுகையின் பின்னர் ஒன்றோ இரண்டோ வசனங்களை பார்த்து ஐந்து தடவை ஓதலாம் ஆறாம் தடவை அது மனனமாகிவிடும். மனனமாகவில்லையா? சோர்ந்து போகத் தேவையில்லை மீண்டும் ஒரு ஐந்து தடவை ட்ரை பண்ணலாம் .
பின் அடுத்த தொழுகையிற்கு முன்னர் அந்த வசனங்களை குர்ஆனில் பார்த்து ஓதிக் கொண்டு முதல் ரகஅத்தில் ஸூரா பாத்திஹாவிற்கு பிறகு நாம் மனனம் செய்த வசனங்களை ஓத வேண்டும் .
சில நேரம் ஓரே தடவையில் ஞாபகம் வராது அடுத்தடுத்த தொழுகைகளில் முயற்சிக்கும் போது இன்ஷா அல்லாஹ் கட்டாயம் வசனங்கள் வாய்க்குள் நுழைந்துவிடும்.
ஒவ்வொரு முறையும் அந்த வசனங்கள் மனனமாக நாவினால் உச்சரிக்கும் போது அடையும் குதூகலம் இருக்கே அப்பப்பா வர்ணிக்க வார்த்தைகளுக்குப் பஞ்சம் ஏற்படும் .
அகில இரட்சகன் முன்னால் , அவனது கலாமை ஒப்புவிக்கும் போது புல்லரித்துப்போவோம். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
அடுத்த நாள் சுபஹுத் தொழுகைவரை நாம் தொழும் ஒவ்வொரு தொழுகையிலும் அதைக்கடைபிடிக்க வசனங்கள் சிலையில் எழுத்தாக மனதில் பதிந்து போகும்.
மனனமிடும் போது தர்ஜுமத்துல் குர்ஆனை பயன்படுத்துவது சிறந்தது. அந்த வசனங்களின் பொருளையும் மனதில் இருத்திக் கொண்டால் தொழுகையில் போகஸும் கூடும்.
அவசரம் தேவையில்லை. சும்மா இருப்பதிலும் ஒரு நாளுக்கு ஒரு வசனத்தை மனனமிடுவதும் சிறப்புத்தானே.
மெது மெதுவாக ஆரம்பிப்போமா?
நான் ஆரம்பித்து விட்டேன் .




Leave a Reply