வெப்ப காலம் வந்துவிட்டால் உடலும் மனமும் சோர்வடைவது இயல்புதான். குறிப்பாக நம் இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்.
இதோ சில எளிய வழிகள்:
- போதுமான தண்ணீர் குடிக்கவும்
தினமும் குறைந்தது 2.5 – 3 லீட்டர் தண்ணீர் குடிக்கவும்.
எலுமிச்சை நீர், மோர், இளநீர், நன்னாரி, லெமன் ஜூஸ் போன்ற இயற்கை பானங்கள் நல்லது.
தாகம் வரும்வரை காத்திருக்காமல் அடிக்கடி குடிக்கவும். அதனால் உடலை காய விடாமல் பாதுகாத்துக் கொள்ள முடிகிறது.
- உணவில் கவனம் செலுத்தவும்
காய்கறி, பழங்கள் அதிகம் சேர்க்கவும்.
தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் உடலுக்கு நல்லது.
அதிக எண்ணெய், காரம், பொரியல் உணவுகளை குறைக்கவும்.
- உடைத் தேர்வு
லேசான, பருத்தி (cotton) உடைகள் அணியவும்.
வெள்ளை அல்லது லைட் நிற ஆடைகள் வெப்பத்தை குறைக்க உதவும்.
- வெளியில் செல்லும் போது
மதியம் 11.00 – 3.00 வரை அதிக வெப்பம் இருக்கும். அவசியமில்லையெனில் வெளியே போகாமல் இருக்கவும். அவசியப்பட்டால் வெளியில் செல்லும் போது
குடை, தொப்பி, கண்ணாடி பயன்படுத்தலாம்.
- வீட்டு சூழல்
ஜன்னல்கள் திறந்து காற்றோட்டம் ஏற்படுத்தவும்.
மாலை நேரத்தில் வீடு குளிர்ச்சியாக இருக்க திரைச்சீலைகளை பயன்படுத்தலாம்.
- குளித்தல்
தினமும் குளிப்பது உடலுக்கு நல்ல உற்சாகத்தையும் சுறுசுறுப்பையும் தரும்.
தினமும் இருமுறை குளித்தாலும் வெப்பம் குறையும். - கவனிக்க வேண்டிய அறிகுறிகள்
அதிக சோர்வு
தலைசுற்றல்
வாந்தி உணர்வு
உடல் வெப்பம் அதிகரித்தல்
இவை இருந்தால் உடனே குளிர்ந்த இடத்தில் ஓய்வு எடுத்து தண்ணீர் குடிக்கவும். நிலைமை மோசமெனில் மருத்துவரை அணுகவும்.
உங்கள் உடலையும் உள்ளத்தையும் பாதுகாப்பது உங்கள் கடமையே..
Fayasa Fasil




Leave a Reply