February 24, 2026

இது உங்களின் குரல்களுக்கான தளம்

மன்னிப்பின் மாதம்

1–2 minutes

இரண்டு வயது ஆண் குழந்தை
அய்லன் ரூமி…
மலப்புறம் (India) மாவட்டத்தை சேர்ந்த
சர்புதீன் – சஃப்னா தம்பதியர் மகன்..
இருவருக்கும் திருமணம் முடிந்து
எட்டு ஆண்டுகள் கழித்து பிறந்தவன் என்பதால் ஒட்டுமொத்த குடும்பமும் போற்றி வளர்த்த பாசமகன் அய்லன்.

ஷார்ஜாவில் பணியாற்றும் சர்புதீன்
கடந்த ஜனவரி 18ம் தேதி விசிட் விசாவில் மனைவியையும் மகனையும் அழைத்து வந்த போது அவர்களுக்கு தெரியாது தங்கள் செல்ல மகனுக்கு இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று.
பிப்ரவரி 12ம் தேதி சர்புதீன் பணிக்கு சென்றிருந்த சமயம் தாய் சஃப்னா
குப்பை கொட்டுவதற்கு குடியிருப்பு
கீழ் பகுதியில் குழந்தையுடன் இறங்கி
குழந்தையை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு குப்பையை தொட்டியில் கொட்டிவிட்டு திரும்பிய கணநேரத்தில் அந்த துயர சம்பவம் அரங்கேறியது..
குழந்தை அய்லன் நிற்பது தெரியாமல்
பார்க்கிங்கில் இருந்து காரை எடுத்த
வேறொரு நபரின் கார் மோதியதில் குழந்தை அய்லன் உடலில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்த்த சில நிமிடங்களில் வஃபாத் ஆன சோகமான சம்பவம் ஷார்ஜாவில் வசிக்கும் ஒட்டுமொத்த மலையாளிகள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியது.

மறுநாள் குழந்தை அய்லன் ஜனாஸா ஷார்ஜாவில் அடக்கம் செய்யப்பட்டது.
குழந்தை மரணத்திற்கு காரணமான காரை ஓட்டிய நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..
குழந்தையின் பிரிவு தம்பதியரை அதிகமாக பாதித்தது. இருவரும் அங்கு தனிமையில் இருப்பது துக்கத்தை அதிகரிக்கும் என்பதால் ஊருக்கு சென்று சிறிது காலம் குடும்பத்தோடு கழிக்க நண்பர்கள் வலியுறுத்தி அனுப்பி வைத்தனர்..

ஊர் திரும்பும் முன்பு தம்பதியர் இருவரும் யோசித்து எடுத்த முடிவு அவர்கள் இருவரின் இறையச்சத்துடன் கூடிய
மனித நேயத்தை பறைசாற்றுகிறது.
“”தங்களின் குழந்தை மரணித்தது அசாதாரணமான விபத்து.
மனப்பூர்வமாக நடந்த சம்பவம் அல்ல.
தங்களின் குழந்தை மரணித்ததற்காக
வேறொரு நபர் சிறையில் இருப்பதும்
அந்த நபரின் குடும்பம் ரமலான் மாதத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர் என்பதை உணர்ந்து
ஷார்ஜா காவல்நிலையம் சென்ற தம்பதியர் இருவரும் தங்களுக்கு புகார் இல்லை என்றும், குழந்தை மரணத்திற்கு காரணமான காரை ஒட்டிய நபரை மன்னித்து விட்டதாகவும்
எழுத்து மூலமாக ஆவணங்களில் கையெழுத்திட்டு வழங்கியது
அவர்களின் உள்ளத்தை உருக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது…

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு அழகிய பொறுமையை வழங்குவானாக.
இதற்கு பகரமாக மக்கள் செல்வங்களை அதிகரித்து வழங்குவானாக ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புள்ள எழுத்துக்கள்

ஸகாத்தை வாரி வழங்குவோம் வள்ளல்களாக மாறுவோம்

Fayasa Fasil இஸ்லாத்தின் கடமைகளில் மூன்றாவது கடமையை ஸகாத். ஸகாத் என்பது மொழியில் வளர்ச்சி ,தூய்மை , சீர்மை , பரக்கத் போன்ற பல கருத்துக்களை தருகின்றது.…

மேலும் வாசிக்க

நாவல் : ஒரே ஒரு மகள் (அத்தியாயம் 05)

திருமணம் முடிந்துவிட்டது. இரவாகிவிட்டது. தோழிகளின் கிண்டல் பார்வைகளையும் நக்கல் பேச்சுக்களையும் நையாண்டி சைககைகளையும் சகித்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள் அம்னா. கல்யாண பரபரப்பில் அஸ்ஜத்துடன் எதுவும் பேசக்…

மேலும் வாசிக்க

இலங்கையின் கல்வித்துறை – போட்டிப் பரீட்சைக்கான தகவல்கள் (01)

இலங்கையின் கல்வித் துறை பற்றி சில முக்கியமான தகவல்களை இந்த அத்தியாயம் முன் வைக்கின்றது. (01 - 100) பகுதி 1: இலங்கை கல்வித் துறையின் வரலாற்றுப்…

மேலும் வாசிக்க

தமிழ் என்றும் வாழும்

தமிழ் மொழியின் வரலாறு உலகின் மிகப் பழமையான மொழிகளில் முதன்மையானது தமிழ் மொழியாகும். அதேபோன்று காலத்திற்குக் காலம் ஏற்பட்ட அழிவுகள், போர்கள், ஆக்கிரமிப்புக்கள் அனைத்தையும் வென்று 'காலத்தை…

மேலும் வாசிக்க

நாவல் – ஒரே ஒரு மகள் (அத்தியாயம் 04)

அம்னாவுக்கு திருமணப் பேச்சு ஆரம்பமாகிவிட்டது. ஒரு பெண்ணின் வாழ்வில் திருப்புமுனையான அம்சம் திருமணம்தான். அது அற்புதமாய் அமைந்துவிட்டால் அதைவிட பெரிய அதிர்ஷ்டம் அவளுக்கு வாய்க்கப் போவதில்லை. அதில்…

மேலும் வாசிக்க

2026 – ஒரே நாளில் Passport எடுப்பது எப்படி? (One Day Service)

ஒரு காலத்தில் எழுதப் படிக்கத் தெரியாதவர்களை விசித்திரமாக பார்ப்பது போன்று இன்று பாஸ்போர்ட் (Passport) இல்லாதவர்களை விநோதமாக பார்க்கும் வழக்கம் தோன்றியிருக்கின்றது. அதிலும் குறிப்பாக ஒரு நாளில்…

மேலும் வாசிக்க

நாவல் – ஒரே ஒரு மகள் அத்தியாயம் 03

அம்னா பல்கலைக்கழகத்திலிருந்து வந்து ஒரு வாரம் கழிந்து விட்டது. இன்னும் வகுப்புக்கள் ஆரம்பிக்க பத்து நாட்கள் இருந்தன. அன்று அவளின் பிறந்த நாள். அந்தி சாய்ந்து கொண்டிருந்தது.…

மேலும் வாசிக்க

பெற்றோருக்காய் ஒரு நிமிடம்..!

Fayasa Fasil தாயின் கருவறையில் பத்திரமாய் பவ்வியமாய் ஒரு சிசு வளர்கிறது நிம்மதியான உறக்கம் கொண்டு தன் செயற்பாட்டை அமைத்துக் கொண்டு செயல்படுகிறது. வெளியுலகை எட்டிப் பார்க்கும்…

மேலும் வாசிக்க

மன்னிப்பின் மாதம்

இரண்டு வயது ஆண் குழந்தைஅய்லன் ரூமி…மலப்புறம் (India) மாவட்டத்தை சேர்ந்தசர்புதீன் - சஃப்னா தம்பதியர் மகன்..இருவருக்கும் திருமணம் முடிந்துஎட்டு ஆண்டுகள் கழித்து பிறந்தவன் என்பதால் ஒட்டுமொத்த குடும்பமும்…

மேலும் வாசிக்க

Fiverr வீட்டில் இருந்தவாரே டொலர் மழையில் குளிக்கலாம்!

இன்றைய காலத்தில் பணம் என்பது எவ்வளவு முக்கியம் என்று நான் சொல்லித்தான் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவசியம் கிடையாது. இல்லானை இல்லத்தவளும் வேண்டாத.. ஈன்றெடுத்த…

மேலும் வாசிக்க

எமது WhatsApp / Telegram குழுவில் சேருங்கள்

புதிய கதைகள், போட்டி அறிவிப்புகள், சிறப்பு பதிவுகள் – நேராக உங்கள் மொபைலில் உடனுக்குடன்.

பதிவுகளை தேட

முக்கிய இணைப்புகள்

  • சிறுகதை
  • கட்டுரைகள்
  • சுயவிவரம் / எழுத்தாளர்கள்
  • வீடியோக்கள்
  • அறிவித்தல்கள்

நீங்களும் எழுதலாம்..

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்தாளரை உலகிற்கு அடையாளம் காட்டுங்கள். உங்கள் ஆக்கபூர்வமான கட்டுரைகளை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இன்றே இணையுங்கள்.

மேலும் அறிய எங்களை அணுகவும்.

கவித்துளி

அடுத்து வாசிக்க

எங்களைப் பற்றி

இதர பக்கங்கள்

தொடர்பு கொள்ள