February 24, 2026

இது உங்களின் குரல்களுக்கான தளம்

ஒரே ஒரு மகள் part – 01

2–3 minutes

அத்தியாயம் 01

இன்னும் நிலா தூங்கவில்லை.

அம்னாவும் தூங்கவில்iலை.

அந்தி நேர அடிவானில் ஒட்டப்பட்டிருந்த ஒற்றை நட்சத்திரம் சிநேகமாகச் சிரித்தது. தொலைதூர அடர்ந்த காடுகளில் இருந்து மேலெழும்பிய மின்மினிகள் புதர்க் காடுகளுக்குள் புகுந்து எதையோ வெகு சீரியஸாக தேடிக் கொண்டிருந்தன. மெல்லிய தென்றலின் மெதுவான வருடல் மேனிக்கு இதம் தந்தது. பக்கத்துக் கட்டிடம்தான் பாண் பேக்கரி. அங்கிருந்து அலை பாய்ந்து வரும் கருகலற்ற முறுவல் வாசம் அம்னாவின் நாசிக்குள் நுழைந்து உயிருக்குள் ஊடுறுவி அவளது சுவை நரம்புகளை கிச்சுக்கிச்சு மூட்ட முனைந்து கொண்டிருந்தது.

இத்தனை நேரமாக நிலாவில் உட்கார்ந்து வடை சுட்டுக் கொண்டிருந்த பாட்டிக்கு இடுப்பு வலி எடுத்துவிட்டது போல. எஞ்சிய சில வடைகளை தனது பேரனுக்கு கொண்டு செல்வதற்காக சேலைத் தலைப்பில் முடிந்து கொண்டிருந்தாள்.

ஆழ்மனதால் பெருமூச்சு விட்டுக் கொண்டாள் அம்னா.

ஏதேதோ எண்ணங்கள் அவளது மனதில் நீச்சலடித்துக் கொண்டிருந்தன. இந்தப் பொல்லா மனது அப்படித்தான். எதை மறந்து தொலைக்க வேண்டும் என யாசிக்கின்றோமோ.. அவற்றையே நினைவில் நிறுத்தி கண்ணாம்பூச்சி விளையாடி கண்ணீர்த் துளிகளால் கருவிழிகளை கருக வைப்பதுதான் அதன் அன்றாட வேலை.

விடிந்தால் அவளுக்கு கல்யாணம்

அவளால் முழுமையாக சந்தோசப்பட முடியவில்லை. மனதுக்கு என்னவோ போல இருந்தது. உயிர் ஊற்றெடுக்கும் இடத்தில் உட்கார்ந்து கொண்டு யாரோ சோகமாக புல்லாங்குழல் வாசிப்பது போன்று நொந்தது.

அன்பிருந்தால் அனுமதி கேட்கத் தேவையில்லை என்று சாச்சி நினைத்துவிட்டார் போலும். உள்ளே நுழைந்து அம்னாவின் நாடியைத் தூக்கி அவளின் நெற்றியில் ஈரம் படாமல் முத்தமிட்டார். ‘என் செல்ல மகளின் முகம் எவ்வளவு பசுந்தாக இருக்குது. ஆயிரம் பௌர்ணமி போன்று’ என்று அதீத ஆனந்தத்தோடு சொல்லிக் கொண்டார். அம்னாவை கல்யாணக் கோலத்தில் பார்க்கும் போது அவரது ஆன்மா அடைந்த அளவற்ற ஆனந்தம் அவரின் இரு விழிகளிலும் பல வழிகளில் வழிந்தது. அதற்கிடையில் அம்னாவின் உயிர்த்தோழி சியாமாவும் வந்துவிட்டாள். ‘என்னடி.. யாருக்கோ கல்யாணம் போல ஓரமாக உட்காந்திருக்கிறாய்.. அவசரமா சாப்பிட்டு விட்டு வா.. மெஹென்தி போடலாம்’ என்று தன் தோழியை செல்லமாய் திட்டி விட்டு காணாமல் போய்விட்டாள். ஒரு இடத்தில் நிற்காமல் தனது தோழியின் கல்யாண வேலைகளை இழுத்துப் போட்டு செய்து கொண்டிருந்தாள். பக்கத்து அறையில் மற்ற தோழிகள் குழுமியிருந்தார்கள். தமக்கு மூன்றாம் வகுப்பு படித்துத் தந்த கோமதி டீச்சரைப் பற்றி நேத்ரா எதையோ சொல்ல ஒட்டுமொத்தமாய் எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். அந்த சிரிப்பொலியின் ஆடம்பரத்தால் ஜன்னல் கண்ணாடிகள் கூட அதிர்ந்து கொண்டிருந்தன.

 ‘எப்போது இரவுச் சாப்பாடு முடியும்.. எனக்கு எப்போது இரண்டு எலும்புத் துண்டு கி;டைக்கும்?’ என்று பக்கத்து வீட்டு பழுப்பு நிற நாய் கன்னத்தில் கால் வைத்து கடும் யோசனையில் ஆழ்ந்திருந்தது. அவசரமாக ஏதாவது கிடைத்தால் அடுத்த தெருவின் எல்லையில் குவிந்திருக்கும் குப்பைகளை கொஞ்சம் கிழறிப் பார்க்கலாம் என அது திட்டமிட்டிருந்தது.

முன் விறாந்தையில் கலகலப்பு கேட்டது.

பக்கத்து ஊரில் இருந்து சின்ன மாமா வந்துவிட்டார் போல.. உம்மா வாய்விட்டுச் சிரிக்கும் சத்தம் பலமாகக் கேட்டது. தனது மகள் நாளை கல்யாண மேடையில் கம்பீரமாக நிற்கப் போகின்றாள் என்ற ஆனந்தத்தை விட அவருக்கு வேறு என்னதான் வேண்டும். எத்தனை நாள் நள்ளிரவு நேரங்களில் விம்மி விம்மி அழுது ஆண்டவனிடம் கேட்டிருப்பாள் அந்த வரத்தை.. இனி கொஞ்ச நாட்களுக்கு ஆளை கையில் பிடிக்க முடியாது. குட்டிச் சிறுமி போல துள்ளிக் குதித்து கலகலத்துக் கொண்டிருந்தார்.

அம்னா சற்றுத் தொலைவில் இருந்;த தொலைபேசியை எட்டி எடுத்தாள். இத்தனை நேரமாய் அது சினுங்கிக் கொண்டிருந்தது. வட்சப் முழுக்க அவளுக்கு வாழ்த்துச் செய்திகள் குவிந்து கொண்டிருந்தன. ஏகப்பட்ட குரல் பதிவுகள் வந்து நிறைந்து கொண்டிருந்தன. ஆனால் எல்லாவற்றையும் தனித்தனியாக வாசித்து பதில் தர இப்போது அவகாசம் இல்லை. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கொஞ்சம் சாய்ந்து கொண்;டாள்.

அதிகமாகவே அசதியாக இருந்தது.

இது அம்னாவின் முதலாவது திருணம் அல்ல..

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புள்ள எழுத்துக்கள்

ஸகாத்தை வாரி வழங்குவோம் வள்ளல்களாக மாறுவோம்

Fayasa Fasil இஸ்லாத்தின் கடமைகளில் மூன்றாவது கடமையை ஸகாத். ஸகாத் என்பது மொழியில் வளர்ச்சி ,தூய்மை , சீர்மை , பரக்கத் போன்ற பல கருத்துக்களை தருகின்றது.…

மேலும் வாசிக்க

நாவல் : ஒரே ஒரு மகள் (அத்தியாயம் 05)

திருமணம் முடிந்துவிட்டது. இரவாகிவிட்டது. தோழிகளின் கிண்டல் பார்வைகளையும் நக்கல் பேச்சுக்களையும் நையாண்டி சைககைகளையும் சகித்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள் அம்னா. கல்யாண பரபரப்பில் அஸ்ஜத்துடன் எதுவும் பேசக்…

மேலும் வாசிக்க

இலங்கையின் கல்வித்துறை – போட்டிப் பரீட்சைக்கான தகவல்கள் (01)

இலங்கையின் கல்வித் துறை பற்றி சில முக்கியமான தகவல்களை இந்த அத்தியாயம் முன் வைக்கின்றது. (01 - 100) பகுதி 1: இலங்கை கல்வித் துறையின் வரலாற்றுப்…

மேலும் வாசிக்க

தமிழ் என்றும் வாழும்

தமிழ் மொழியின் வரலாறு உலகின் மிகப் பழமையான மொழிகளில் முதன்மையானது தமிழ் மொழியாகும். அதேபோன்று காலத்திற்குக் காலம் ஏற்பட்ட அழிவுகள், போர்கள், ஆக்கிரமிப்புக்கள் அனைத்தையும் வென்று 'காலத்தை…

மேலும் வாசிக்க

நாவல் – ஒரே ஒரு மகள் (அத்தியாயம் 04)

அம்னாவுக்கு திருமணப் பேச்சு ஆரம்பமாகிவிட்டது. ஒரு பெண்ணின் வாழ்வில் திருப்புமுனையான அம்சம் திருமணம்தான். அது அற்புதமாய் அமைந்துவிட்டால் அதைவிட பெரிய அதிர்ஷ்டம் அவளுக்கு வாய்க்கப் போவதில்லை. அதில்…

மேலும் வாசிக்க

2026 – ஒரே நாளில் Passport எடுப்பது எப்படி? (One Day Service)

ஒரு காலத்தில் எழுதப் படிக்கத் தெரியாதவர்களை விசித்திரமாக பார்ப்பது போன்று இன்று பாஸ்போர்ட் (Passport) இல்லாதவர்களை விநோதமாக பார்க்கும் வழக்கம் தோன்றியிருக்கின்றது. அதிலும் குறிப்பாக ஒரு நாளில்…

மேலும் வாசிக்க

நாவல் – ஒரே ஒரு மகள் அத்தியாயம் 03

அம்னா பல்கலைக்கழகத்திலிருந்து வந்து ஒரு வாரம் கழிந்து விட்டது. இன்னும் வகுப்புக்கள் ஆரம்பிக்க பத்து நாட்கள் இருந்தன. அன்று அவளின் பிறந்த நாள். அந்தி சாய்ந்து கொண்டிருந்தது.…

மேலும் வாசிக்க

பெற்றோருக்காய் ஒரு நிமிடம்..!

Fayasa Fasil தாயின் கருவறையில் பத்திரமாய் பவ்வியமாய் ஒரு சிசு வளர்கிறது நிம்மதியான உறக்கம் கொண்டு தன் செயற்பாட்டை அமைத்துக் கொண்டு செயல்படுகிறது. வெளியுலகை எட்டிப் பார்க்கும்…

மேலும் வாசிக்க

மன்னிப்பின் மாதம்

இரண்டு வயது ஆண் குழந்தைஅய்லன் ரூமி…மலப்புறம் (India) மாவட்டத்தை சேர்ந்தசர்புதீன் - சஃப்னா தம்பதியர் மகன்..இருவருக்கும் திருமணம் முடிந்துஎட்டு ஆண்டுகள் கழித்து பிறந்தவன் என்பதால் ஒட்டுமொத்த குடும்பமும்…

மேலும் வாசிக்க

Fiverr வீட்டில் இருந்தவாரே டொலர் மழையில் குளிக்கலாம்!

இன்றைய காலத்தில் பணம் என்பது எவ்வளவு முக்கியம் என்று நான் சொல்லித்தான் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவசியம் கிடையாது. இல்லானை இல்லத்தவளும் வேண்டாத.. ஈன்றெடுத்த…

மேலும் வாசிக்க

எமது WhatsApp / Telegram குழுவில் சேருங்கள்

புதிய கதைகள், போட்டி அறிவிப்புகள், சிறப்பு பதிவுகள் – நேராக உங்கள் மொபைலில் உடனுக்குடன்.

பதிவுகளை தேட

முக்கிய இணைப்புகள்

  • சிறுகதை
  • கட்டுரைகள்
  • சுயவிவரம் / எழுத்தாளர்கள்
  • வீடியோக்கள்
  • அறிவித்தல்கள்

நீங்களும் எழுதலாம்..

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்தாளரை உலகிற்கு அடையாளம் காட்டுங்கள். உங்கள் ஆக்கபூர்வமான கட்டுரைகளை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இன்றே இணையுங்கள்.

மேலும் அறிய எங்களை அணுகவும்.

கவித்துளி

அடுத்து வாசிக்க

எங்களைப் பற்றி

இதர பக்கங்கள்

தொடர்பு கொள்ள