February 24, 2026

இது உங்களின் குரல்களுக்கான தளம்

புத்தகம் எழுதுவது எவ்வாறு?

3–5 minutes
Creator

புத்தகம் எழுதுவது எவ்வாறு?

நீண்ட நாட்களாக பலரும் கேட்கின்ற கேள்வி ஒன்று இருக்கின்றது. அது புத்தகம் எழுதுவது எவ்வாறு என்று.. நானும் என்னால் முடிந்த அளவில் பொருத்தமான பதில்களை வழங்கியுள்ளேன். சிலர் விடாப்பிடியாக என்னைப் பிடித்து இரண்டு மூன்று புத்தகங்களை எழுதிவிட்டனர். இன்னும் சிலர் இரண்டு மூன்று கேள்விகளோடு காணாமல் போய்விட்டனர்.

இப்போது கொஞ்சம் ஓய்வு கிடைத்திருக்கின்றது. புத்தகம் எழுதுவது எவ்வாறு என்று எனக்குத் தெரிந்த சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

எழுத்து என்பது எமது உள்ளத்திற்கும் உணர்வுக்கும் சுறுசுறுப்பு தரும் மந்திர பானமாகும். அதனை சரிவர பயன்படுத்தும்போது இந்த உலகின் தலைவிதியைக் கூட தலைகீழாய் மாற்றிவிடலாம்.

புத்தகங்கள் பல்வேறு காரணங்களுக்காக, இலக்குகளுக்காக வெளியிடப்படுகின்றன. தனது அடையாளத்தை நிரூபிப்பதற்காக, சமூகத்தில் மாற்றமொன்றை நிகழ்த்துவதற்காக, மேலதிக வருமானம் ஒன்றை தேடிக் கொள்வதற்காக.. என அந்த இலக்குகள் மாறுபடுகின்றன. ஆகவே, கீழே உள்ள பொதுக் குறிப்புக்களும் உங்கள் இலக்குகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப சிற்சில மாற்றங்களை எதிர்கொள்ளும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

1.           மனநிலை (Mindset)

புத்தகம் எழுதுவதற்கு முதலில் அடிப்படைத் தேவை அதற்குரிய மனநிலையாகும். வெறுமனே ஒரு கட்டுரையை எழுதுவது போன்றோ… அல்லது கவிதையொன்றை பிரசவிப்பது போன்றோ கட்டுரையை எழுதிவிட முடியாது. அதற்கு ஆழமான மனநிலையொன்று வேண்டும்.

புத்தகம் எழுதுவது என்பது தொடர் செயற்பாடு. அதன் முதல் அத்தியாயத்தில் நாம் காட்டும் அக்கறையும் ஆர்வமும் இறுதி முற்றுப்புள்ளி வரை தொடர வேண்டும் என்பதால் இந்த மனநிலை அவசியப்படுகின்றது. புத்தகங்களை வாசித்தல், எழுத்தாளர்களுடனான உரையாடல், ஆழ்ந்த சிந்தனை, சில நீண்ட பயணங்கள் என்பன எமக்கு புத்தகங்களை எழுதுவதற்கான உந்துதலை பரிசளிக்கலாம்.

2.           எமது துறையை தெரிவு செய்யலாம்

நான் அடிக்கடி கூறும் வசனம் ஒன்று இருக்கின்றது. இங்கு அநேகப் பேர் தமது திறமைகளால் இந்த உலகை வெற்றி கொள்ள இயலாமல் போனதற்குக் காரணம் தமக்கு பொருத்தமில்லாத துறையில் வீண் முயற்சி செய்வதும் தனக்கு பொருத்தமான துறையில் சோம்பிக் கிடப்பதுமாகும்.

புத்தகம் எழுத விரும்பினால் உங்கள் துறை எது என்பதை முதலில் தெரிவு செய்யுங்கள். இலக்கியம், அரசியல், கலை, விஞ்ஞானம், தொழிநுட்பம், மோட்டிவேஷன்… என உங்களுக்கான துறையை தேர்வு செய்து கொள்ளுங்கள். ஒரு எழுத்தாளர் எத்தனை துறைகளில் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், தனது கால்களை ஸ்தீரப்படுத்துவதற்கு ஏதாவது துறையை முதலில் தெரிவு செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அதன் பிறகு விரும்பிய துறையில் ஒரு கலக்கு கலக்கலாம்.

3.           மொழிநடையை தெரிவு செய்து கொள்ளுங்கள்

நீங்கள் யாருக்காக எழுதுகின்றீர்கள் என்பது அத்தியாவசியமாகும். புத்திஜீவிகளுக்காக எழுதுகின்றீர்களா? சாதாரண பொதுமக்களுக்காக எழுதுகின்றீர்களா? மாணவர்களுக்காக எழுதுகின்றீர்களா? குழந்தைகளுக்காக எழுதுகின்றீர்களா? என்பதை வரையறை செய்து கொள்ளுங்கள். இது தவிர்த்து சமூக வளைத்தளங்களில் பத்திகள் எழுதுவதென்றால் அதற்கென தனி மொழிநடை இருப்பது உங்களுக்குத் தெரியும்.

4.           திட்டமிடல் (planing)

முதலில் புத்தகத்தில் கருப்பொருளை தெரிவு செய்து கொள்ளுங்கள். அது தொடர்பான உப தலைப்புக்களை ஆக்கிக் கொள்ளுங்கள். உதாரணமாக உங்கள் தந்தையைப் பற்றி எழுதப் போகின்றீர்கள் என்றால்.. அவரின் தோற்றம், உங்களுடனான உறவாடல்கள், உங்களுக்கும் அவருக்கும் இடையிலான அந்தரங்க பாசப் போராட்டம், அவரின் ஆளுமைகள், அவருடனான மறக்க முடியாத சம்பவங்கள் போன்றவற்றை எழுதிக் கொள்ளுங்கள். அதற்குப் பிறகு அவற்றை தலைப்பு ரீதியாக முன் வைப்பதா அல்லது அல்லது நாவல் வடிவத்தில் பரிமாறுவதா என்பதை நாம் தீர்மானித்துக் கொள்ளலாம்.

எத்தனை தலைப்புக்களாக அல்லது எத்தனை அத்தியாயங்களாக எழுத வேண்டும் என்று திட்டமிட்டுக் கொள்ளுங்கள். அதேபோன்று ஒவ்வொரு அத்தியாயமும் எந்த அளவு வரவேண்டும் என்பதை திட்டமிடவும் மறக்க வேண்டாம்.

5.           எழுத ஆரம்பியுங்கள் (start)

அதிகம் யோசித்தால் வேலைக்கு ஆகாது. எழுத ஆரம்பித்து விடுங்கள். எழுதுவற்கான மனநிலையை சரியாக புரிந்து கொள்ளுங்கள். சில பொழுதுகளில் உங்களால் ஆயிரம் பக்கங்களைக் கூட அசால்டாக எழுதிவிட முடியும். ஆனால், இன்னும் சில நேரங்களை அகரத்தை எழுதக் கூட முடியாமல் முண்டியடிக்க வேண்டியிருக்கும். அப்போது எழுதினால் உப்புச்சப்பற்ற எழுத்துக்கள்தான் குறைபிரசவமாய் கொட்டும். ஆகவே, உரிய மனநிலையை எழுத பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

6.           தட்டச்சு (Type) செய்து கொள்ளுங்கள்

புத்தகத்தை தட்டச்சு செய்து கொள்ளுங்கள். பாமினி  (Bamini) எழுத்தச்சில் தட்டச்சு செய்வது பயனுள்ளதாக இருக்கும்.

7.           செவ்வை பார்த்தல் (Proof Reading)

உங்கள் ஆக்கங்களில் எழுத்துப் பிழைகள், வசனப் பிழைகள், கருத்து மயக்கங்கள் இருக்கின்றனவா என பார்த்துக் கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் இன்னொருவரின் உதவியை நாடலாம். ஏனென்றால், நாம் விடும் தவறுகளை நமது மூளை நம்மிடமிருந்து மறைத்துவிடும்.

8.           ஆலோசனை கேளுங்கள்

உங்கள் எழுத்தாக்கத்தை உரிய எழுத்தாளர்களுக்கு காட்சி சில ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள தயங்காதீர்கள். ஆனால், ஆனால், ஆனால், மிகக் கவனம். பொருத்தமான எழுத்தாளர்கள் மட்டும் இருந்தால் மாத்திரமே ஆலோசனை கேளுங்கள். ஏனென்றால், எழுத்தாளர்களில், இலக்கியவாதிகளில் பெரும்பாலானவர்கள் திமிர் நோயால் அவதிப்படுபவர்கள். இன்னும் சிலர் இந்த உலகத்தில் தாம் மட்டுமே பெரிய்ய்ய்ய எழுத்தாளர் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள். இவர்களிடம் நமது அப்பாவி நூலைக் காட்டினால் அவ்வளவுதான். மலத்தை மிதித்தது போன்று மூஞ்சியை வைத்துக் கொண்டு அவர்கள் கிழிக்கின்ற கிழியில் ‘வேண்டாம் தங்கமே, இதற்கு அப்புறம் புத்தகம் எழுதுவதைப் பற்றி கனவில கூட நினைத்துப் பார்க்க மாட்டேன்’ என்று ஓடி வந்து விடுவீர்கள். ஆகவே, பொருத்தமானவர்கள் இருந்தால் மட்டும் ஆலோசனை கேளுங்கள். இல்லாவிட்டால் வேண்டாம்.

9.           வடிவமைப்பு செய்யுங்கள் (Layout)

வடிவமைப்பாளர்கள் உங்கள் பக்கங்களை வடிவமைப்பு செய்து தருவார்கள். உங்களுக்கு பொருத்தமான அட்டைப்படத்தை (Cover page) செய்து தருவார்கள். வேலையை ஆரம்பிக்க முன்பே உங்கள் புத்தகம் இவ்வாறுதான் வரவேண்டும்.. இவ்வாறுதான் அதன் படங்கள் அமைய வேண்டும்… இந்த அளவுதான் உங்கள் எழுத்துக்கள் இருக்க வேண்டும் என்பதை தெளிவாகக் கூறிக் கொண்டால் தேவையற்ற சங்கடங்களை தவிர்த்துக் கொள்ளலாம்.

10.         பதிவு செய்தல்

இலங்கையில் வெளியாகும் அனைத்துப் புத்தகங்களையும் பதிவு செய்தல் அவசியமாகும். எமது பாசையில் இதை ISBN இலக்கம் பெறல் என்று சொல்லிக் கொள்வார்கள்.

இணையதளத்தினுள் நுழைந்து ISBN Apply டைப் செய்யுங்கள். National Library இனுடைய இணையதளம் விரியும். அதில் ISBN Apply என்பதை சொடுக்குங்கள். உங்களுக்குத் தேவையான விபரங்களை பூர்த்தி செய்யுங்கள். அடையாள அட்டையில் உள்ளவாரே உங்கள் தகவல்களை பூர்த்தி செய்யுங்கள். கட்டணமாக வெறும் 400 ரூபாய் மாத்திரமே அறவிடப்படும். அதற்காக மக்கள் வங்கி அட்டையை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சில மணித்துளிகளில் அல்லது, ஒரு சில நாட்களில் உங்களுக்கான  ISBN இலக்கம் கிடைத்துவிடும்.

11.         வெளியிடுவது எவ்வாறு?

புத்தகம் எழுதும் பெரும்பாலானவர்கள் எதிர்நோக்கும் சிக்கல் இதுதான். எழுதிய புத்தகத்தை, வடிவமைத்த புத்தகத்தை எவ்வாறு வெளியிடுவது..

மற்ற நாடுகளைப் போன்று இலங்கையில் ஊக்கப்படுத்துவதற்காக புத்தகங்களை வெளியிடுவது அரிதாகும். National Library சில முயற்சிகளை மேற்கொள்கின்றது எனவும் இன்னும் சில பதிப்பங்கள் இதற்கு அவ்வப்போது உதவி செய்கின்றது எனவும் அறிந்தேன். ஆனால், எமது புத்தகங்களை கண்டவுடனேயே கண்களில் நீர் மல்க எம்மை கட்டியணைத்து உச்சி முகர்ந்து எமது புத்தகங்களை வெளியிட ஆள் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சில பிரபல எழுத்தாளர்களுக்கு இந்த வாய்ப்பு இருக்கலலாம்.

புத்தகங்கள் எழுதி முடித்தால்..

1.           வெளியீட்டகங்களை  (Publication) தொடர்பு கொண்டு எமது புத்தகம் பற்றி எடுத்துரைக்கலாம். அவர்கள் ஏற்றுக் கொண்டால் அவர்கள் புத்தகத்தை வெளியிட்டு இலாபத்தில் ஒரு பங்கை எமக்குத் தருவார்கள்.

அல்லது,

2.           எம்மால் புத்தகங்களை விற்க முடியும் என நினைத்தால் நாமே அவற்றை வெளியிடலாம். இன்று எமது தனிப்பட்ட தொடர்புகள் மூலமும் சமூக வளைத்தளங்கள் மூலமும் தாராளமாக சந்தை வசதியை உருவாக்கக் கூடிய வாய்ப்புக்கள் மலிந்திருக்கின்றன.

அல்லது

3. E-Book வடிவத்தில் வெளியிடலாம். இதற்காகவும் எம்மால் வாசகர்களிடமிருந்து கட்டணம் ஒன்றை அறவிட்டுக் கொள்ள முடியும்.

புத்தகம் எழுதுதல், வடிவமைத்தல், வெளியிடல், விற்பனை செய்தல் போன்றன பற்றி உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை கொமண்ட் செய்யுங்கள். அதற்குரிய பதில்களை அடுத்த பதிவில் விரிவாக தர முயற்சிக்கின்றோம்.

2 responses to “புத்தகம் எழுதுவது எவ்வாறு?”

  1. Sumaiya Ismail Avatar

    மிகவும் பயனுள்ள பதிவு

    جزاك الله خيرا

  2. Sumaiya Ismail Avatar

    மிகவும் பயனுள்ள பதிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புள்ள எழுத்துக்கள்

ஸகாத்தை வாரி வழங்குவோம் வள்ளல்களாக மாறுவோம்

Fayasa Fasil இஸ்லாத்தின் கடமைகளில் மூன்றாவது கடமையை ஸகாத். ஸகாத் என்பது மொழியில் வளர்ச்சி ,தூய்மை , சீர்மை , பரக்கத் போன்ற பல கருத்துக்களை தருகின்றது.…

மேலும் வாசிக்க

நாவல் : ஒரே ஒரு மகள் (அத்தியாயம் 05)

திருமணம் முடிந்துவிட்டது. இரவாகிவிட்டது. தோழிகளின் கிண்டல் பார்வைகளையும் நக்கல் பேச்சுக்களையும் நையாண்டி சைககைகளையும் சகித்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள் அம்னா. கல்யாண பரபரப்பில் அஸ்ஜத்துடன் எதுவும் பேசக்…

மேலும் வாசிக்க

இலங்கையின் கல்வித்துறை – போட்டிப் பரீட்சைக்கான தகவல்கள் (01)

இலங்கையின் கல்வித் துறை பற்றி சில முக்கியமான தகவல்களை இந்த அத்தியாயம் முன் வைக்கின்றது. (01 - 100) பகுதி 1: இலங்கை கல்வித் துறையின் வரலாற்றுப்…

மேலும் வாசிக்க

தமிழ் என்றும் வாழும்

தமிழ் மொழியின் வரலாறு உலகின் மிகப் பழமையான மொழிகளில் முதன்மையானது தமிழ் மொழியாகும். அதேபோன்று காலத்திற்குக் காலம் ஏற்பட்ட அழிவுகள், போர்கள், ஆக்கிரமிப்புக்கள் அனைத்தையும் வென்று 'காலத்தை…

மேலும் வாசிக்க

நாவல் – ஒரே ஒரு மகள் (அத்தியாயம் 04)

அம்னாவுக்கு திருமணப் பேச்சு ஆரம்பமாகிவிட்டது. ஒரு பெண்ணின் வாழ்வில் திருப்புமுனையான அம்சம் திருமணம்தான். அது அற்புதமாய் அமைந்துவிட்டால் அதைவிட பெரிய அதிர்ஷ்டம் அவளுக்கு வாய்க்கப் போவதில்லை. அதில்…

மேலும் வாசிக்க

2026 – ஒரே நாளில் Passport எடுப்பது எப்படி? (One Day Service)

ஒரு காலத்தில் எழுதப் படிக்கத் தெரியாதவர்களை விசித்திரமாக பார்ப்பது போன்று இன்று பாஸ்போர்ட் (Passport) இல்லாதவர்களை விநோதமாக பார்க்கும் வழக்கம் தோன்றியிருக்கின்றது. அதிலும் குறிப்பாக ஒரு நாளில்…

மேலும் வாசிக்க

நாவல் – ஒரே ஒரு மகள் அத்தியாயம் 03

அம்னா பல்கலைக்கழகத்திலிருந்து வந்து ஒரு வாரம் கழிந்து விட்டது. இன்னும் வகுப்புக்கள் ஆரம்பிக்க பத்து நாட்கள் இருந்தன. அன்று அவளின் பிறந்த நாள். அந்தி சாய்ந்து கொண்டிருந்தது.…

மேலும் வாசிக்க

பெற்றோருக்காய் ஒரு நிமிடம்..!

Fayasa Fasil தாயின் கருவறையில் பத்திரமாய் பவ்வியமாய் ஒரு சிசு வளர்கிறது நிம்மதியான உறக்கம் கொண்டு தன் செயற்பாட்டை அமைத்துக் கொண்டு செயல்படுகிறது. வெளியுலகை எட்டிப் பார்க்கும்…

மேலும் வாசிக்க

மன்னிப்பின் மாதம்

இரண்டு வயது ஆண் குழந்தைஅய்லன் ரூமி…மலப்புறம் (India) மாவட்டத்தை சேர்ந்தசர்புதீன் - சஃப்னா தம்பதியர் மகன்..இருவருக்கும் திருமணம் முடிந்துஎட்டு ஆண்டுகள் கழித்து பிறந்தவன் என்பதால் ஒட்டுமொத்த குடும்பமும்…

மேலும் வாசிக்க

Fiverr வீட்டில் இருந்தவாரே டொலர் மழையில் குளிக்கலாம்!

இன்றைய காலத்தில் பணம் என்பது எவ்வளவு முக்கியம் என்று நான் சொல்லித்தான் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவசியம் கிடையாது. இல்லானை இல்லத்தவளும் வேண்டாத.. ஈன்றெடுத்த…

மேலும் வாசிக்க

எமது WhatsApp / Telegram குழுவில் சேருங்கள்

புதிய கதைகள், போட்டி அறிவிப்புகள், சிறப்பு பதிவுகள் – நேராக உங்கள் மொபைலில் உடனுக்குடன்.

பதிவுகளை தேட

முக்கிய இணைப்புகள்

  • சிறுகதை
  • கட்டுரைகள்
  • சுயவிவரம் / எழுத்தாளர்கள்
  • வீடியோக்கள்
  • அறிவித்தல்கள்

நீங்களும் எழுதலாம்..

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்தாளரை உலகிற்கு அடையாளம் காட்டுங்கள். உங்கள் ஆக்கபூர்வமான கட்டுரைகளை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இன்றே இணையுங்கள்.

மேலும் அறிய எங்களை அணுகவும்.

கவித்துளி

அடுத்து வாசிக்க

எங்களைப் பற்றி

இதர பக்கங்கள்

தொடர்பு கொள்ள