February 24, 2026

இது உங்களின் குரல்களுக்கான தளம்

அல்லாஹ்வைப் புரிந்துகொள்வோம்

2–3 minutes
Praying to Allah
  1. அல்லாஹ்வின் திருநாமங்கள்
  2. அல்குர்ஆன், ஹதீஸ் வசனங்கள்
  3. நபிமார்களின், நல்லடியார்களின் வரலாறு
  4. எமது வாழ்வில் நடக்கும் சம்பவங்கள்
  5. அல்லாஹ்வின் படைப்புக்களைப் பற்றி ஆராய்தல்


அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களின் அற்புதமான கருத்துக்களை கற்றுக்கொள்ளும் போதும் அவை பற்றி ஆழமாக கற்கும்போதும் நாம் அல்லாஹ்வைப் பற்றி இன்னும் இன்னும் தெளிவாக கற்றுக் கொள்ளலாம்.

உதாரணமாக ‘அர்ரஹீம்’ என்ற திருநாமமானது அல்லாஹ்வின் அளவற்ற கருணை பற்றி நமக்கு கற்றுத் தருகின்றது. இந்த வாழ்வில் நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு காலெட்டிலும் அல்லாஹ்வின் அளவற்ற அன்பு நிறைந்திருப்பதை அது நினைவூட்டுகின்றது. ‘அர்ரஸ்ஸாக்’ என்ற திருநாமம் எமது அனைத்து வாழ்வாதாரங்களும் – வாழ்வதற்குத் தேவையான அனைத்து விடயங்களும் அல்லாஹ்வால் ஏற்கனவே தயார்படுத்தப்பட்டுள்ளன என்ற நம்பிக்கையை நமக்குத் தருகின்றது. ‘அர்ரகீப்’ என்ற திருநாமம் அல்லாஹ் எப்போதும் எம்மை கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் என்ற சிந்தனையை எமக்கு தந்துவிடுவதால் நாம் பாவங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள எமக்கு உதவுகின்றது.

அல்குர்ஆன் வசனங்கள், நபிமொழிகள்
அல்குர்ஆன் வசனங்களும் அண்ணலாரின் நபிமொழிகளும் அல்லாஹ்வைப் பற்றி எமக்கு இன்னும் இன்னும் அதிகமாக கற்றுத் தருகின்றன. உதாரணமாக பின்வரும் அல்குர்ஆன் வசனம் அல்லாஹ்வே அகிலத்தின் அதிபதி. அவனே எமக்கு பொறுப்புதாரி என்ற நம்பிக்கையை வலுவூட்டுகின்றது.

‘அவன் கிழக்கு மேற்குத் திசையின் அதிபதி ஆவான். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. எனவே, அவனையே உமக்கு பொறுப்பேற்பவனாக (வகீல்) ஆக்கிக் கொள்வீராக!’ (அல்குர்ஆன் 73:9)

அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறிய இந்த ஹதீஸ் அல்லாஹ்வின் அருட்கொடைகளின் பிரம்மாண்டம் பற்றி எமக்குக் கற்றுத் தருகின்றது.

‘எனதருமை அடியார்களே..! நான் உணவளிக்காவிட்டால் நீங்கள் அனைவரும் பசியோடுதான் இருப்பீர்கள். ஆகவே, என்னிடம் உணவளிக்கக் கேளுங்கள். எனதருமை அடியார்களே நான் ஆடை தராவிட்டால் நீங்கள் அனைவரும் ஆடையின்றியே இருப்பீர்கள். ஆகவே, என்னிடம் ஆடை கேளுங்கள். எனதருமை அடியார்களே ஒட்டுமொத்த மனித இனமும் ஜின் இனமும் ஓரிடத்தில் ஒன்றுகூடி அவர்களது அனைத்துத் தேவைகளையும் ஒன்றுசேர என்னிடம் கேட்டுவிட்டு, அந்தத் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுத்தால் கூட,ஒரு பெரும் சமுத்திரத்தில் ஊசி ஒன்றை முக்கி எடுத்தால் எவ்வளவு தண்ணீர் குறையுமோ அந்த அளவு கூட என்னிடம் இருக்கும் அருள்வளங்களில் இருந்து குறையாது’
அறிவிப்பாளர்: அபூதர் கிபாரி (ரழி) நூல் : முஸ்லிம் திர்மிதி


நபிமார்களின் நல்லடியார்களின் வரலாறு
இவை போன்றே. அல்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் நிறைந்திருக்கும் நபிமார்களின் வரலாறு, அதேபோன்று நல்லடியார்களின் வரலாற்றுச் சம்பவங்கள் போன்றவற்றிலும் நாம் அல்லாஹ்வைப் பற்றி, அவனது வரம்புகளற்ற அன்பு நதி பற்றி, அவனது அருட்கொடைகள் பற்றி நாம் தெட்டத்தெளிவாக அறிந்துகொள்ளலாம்.
ஒட்டுமொத்த மரக்கட்டைகளையும் விறகுக் குவியல்களையும் ஒன்றுசேர்த்த கொடிய எதிரிகள் அதில் தீ மூட்டி பென்னம்பெரிய தீக்கிடங்கை உருவாக்கினார்கள்.

அது அனலாக கொழுந்துவிட்டெறிய ஆரம்பித்ததும் அனைத்துத் திசைகளிலும் வெப்பம் பரவி கொடூரமாக மாறிவிட்டது. அதன் அருகே நிற்கக் கூட அனைவரும் அச்சப்பட்டு விலகிக் சென்றார்கள். அதற்குள்தான் இறைத்தூதர் ஒருவரை தூக்கியெறி;ந்தார்கள்.
ஆனால்,
அவர் அச்சப்படவில்லை…
அலறவில்லை…
சஞ்சலப்படவில்லை…
சலனப்படவில்லை…
அல்லாஹ் என்னைப் பாதுகாக்க போதுமானவன். நான் அவனிடமே என்னிடம் பொறுப்புச் சாட்டுகின்றேன் என்று அல்லாஹ்வின் அன்பிடம் முற்றாக தஞ்சமடைந்துவிட்டார். அல்லாஹ் அவரை கைவிடவில்லை. கொடிய நெருப்பு அவருக்கு குளிர்ந்த நந்தவனமாக மாறியது. அது அவருக்கு இன்பமான இடமாக மாறிவிட்டது. துளியளவும் தீங்கின்றி, அணுவளவும் பாதிப்பின்றி அவர் திரும்பி வந்தார்.
அவர் யார் என்று உங்களுக்குத் தெரியும்தானே..!


எமது வாழ்க்கைச் சம்பவங்கள்
இதுபோன்றுதான் எமது வாழ்க்கையிலும் நாம் அல்லாஹ்வைப் பற்றி புரிந்து கொள்ள பல அற்புதமான சந்தர்ப்பங்கள் வாய்த்திருக்கும். பார்க்கும் கண்ணோட்டத்தில் பார்த்தால் அல்லாஹ்வின் அன்பை இன்னும் ஆழமாக நாம் கண்டுணர்ந்து கொள்ளலாம். மற்றவர்களுக்கு கிடைக்காத சில அருட்கொடைகள் எமக்கு மிகவும் இலகுவாக கிடைத்திருக்கும். சில ஆபத்தான சந்தர்ப்பங்களில் இருந்து அல்லாஹ் எம்மை மிக எளிதா காப்பாற்றியிருப்பான். நாம் மிகவும் ஆசைப்பட்ட விடயங்கள் எமக்கு பொருத்தமற்றது என்பதால் அது எமக்கு கிடைக்காமல் போயிருக்கும். இன்னும்.. இன்னும்.. சொல்லிக் கொண்டே போகலாம்.
அல்லாஹ்வின் அற்புதப் படைப்புக்கள்
அல்லாஹ்வின் அற்புதமான, நேர்த்தியான, பிரம்மாண்டமான படைப்புக்களைப் பற்றி ஆராய்ந்தாலே – அவற்றை உற்றுநோக்கினாலே நாம் அல்லாஹ்வைப் பற்றி அறிந்து கொள்ளலாம். அல்குர்ஆனே எம்மை அல்லாஹ்வின் படைப்புக்களை உற்றுநோக்குமாறும் அவற்றைப் பற்றி ஆராயுமாறும் ஏவுகின்றது.


இந்த பிரபஞ்சத்தைப் பற்றி ஆராயும் நாம் அல்லாஹ்வின் அற்புதம ஆற்றலைக் கண்டு மெய்மறந்து நிற்கின்றோம்.
உயர்ந்த வானில் உட்கார்ந்து கண்சிமிட்டும் நட்சத்திரங்கள்
ஆழ்கடலினுள் அமைதியாக நீந்திக் கொண்டிருக்கும் அற்புத உயிரினங்கள்
மனித உடலுக்குள் மறைமுகமாக நடைபெறும் செயற்பாடுகள்
சின்னஞ்சிறு உயிரினங்களின் விசித்திரமான வாழ்க்கை வட்டம்
என நாம் பார்க்கப் பார்க்க எம்மை ஆச்சரியத்தில் வாய் பிளக்க வைக்கும் வகையில்தான் அல்லாஹ் இந்த விசாலமான உலகை அதிசயமாக படைத்திருக்கின்றான்.

அதனால்தான் உலகை உண்மைக் கண்களால் ஆராய்ந்த அறிஞர்கள் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ள போட்டி போட்டுக்கொண்டார்கள்.
அல்லாஹ்வைப் பற்றி புரிந்துகொள்வதால் எமக்குக் கிடைக்கும் பரிசுகள் எவை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புள்ள எழுத்துக்கள்

ஸகாத்தை வாரி வழங்குவோம் வள்ளல்களாக மாறுவோம்

Fayasa Fasil இஸ்லாத்தின் கடமைகளில் மூன்றாவது கடமையை ஸகாத். ஸகாத் என்பது மொழியில் வளர்ச்சி ,தூய்மை , சீர்மை , பரக்கத் போன்ற பல கருத்துக்களை தருகின்றது.…

மேலும் வாசிக்க

நாவல் : ஒரே ஒரு மகள் (அத்தியாயம் 05)

திருமணம் முடிந்துவிட்டது. இரவாகிவிட்டது. தோழிகளின் கிண்டல் பார்வைகளையும் நக்கல் பேச்சுக்களையும் நையாண்டி சைககைகளையும் சகித்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள் அம்னா. கல்யாண பரபரப்பில் அஸ்ஜத்துடன் எதுவும் பேசக்…

மேலும் வாசிக்க

இலங்கையின் கல்வித்துறை – போட்டிப் பரீட்சைக்கான தகவல்கள் (01)

இலங்கையின் கல்வித் துறை பற்றி சில முக்கியமான தகவல்களை இந்த அத்தியாயம் முன் வைக்கின்றது. (01 - 100) பகுதி 1: இலங்கை கல்வித் துறையின் வரலாற்றுப்…

மேலும் வாசிக்க

தமிழ் என்றும் வாழும்

தமிழ் மொழியின் வரலாறு உலகின் மிகப் பழமையான மொழிகளில் முதன்மையானது தமிழ் மொழியாகும். அதேபோன்று காலத்திற்குக் காலம் ஏற்பட்ட அழிவுகள், போர்கள், ஆக்கிரமிப்புக்கள் அனைத்தையும் வென்று 'காலத்தை…

மேலும் வாசிக்க

நாவல் – ஒரே ஒரு மகள் (அத்தியாயம் 04)

அம்னாவுக்கு திருமணப் பேச்சு ஆரம்பமாகிவிட்டது. ஒரு பெண்ணின் வாழ்வில் திருப்புமுனையான அம்சம் திருமணம்தான். அது அற்புதமாய் அமைந்துவிட்டால் அதைவிட பெரிய அதிர்ஷ்டம் அவளுக்கு வாய்க்கப் போவதில்லை. அதில்…

மேலும் வாசிக்க

2026 – ஒரே நாளில் Passport எடுப்பது எப்படி? (One Day Service)

ஒரு காலத்தில் எழுதப் படிக்கத் தெரியாதவர்களை விசித்திரமாக பார்ப்பது போன்று இன்று பாஸ்போர்ட் (Passport) இல்லாதவர்களை விநோதமாக பார்க்கும் வழக்கம் தோன்றியிருக்கின்றது. அதிலும் குறிப்பாக ஒரு நாளில்…

மேலும் வாசிக்க

நாவல் – ஒரே ஒரு மகள் அத்தியாயம் 03

அம்னா பல்கலைக்கழகத்திலிருந்து வந்து ஒரு வாரம் கழிந்து விட்டது. இன்னும் வகுப்புக்கள் ஆரம்பிக்க பத்து நாட்கள் இருந்தன. அன்று அவளின் பிறந்த நாள். அந்தி சாய்ந்து கொண்டிருந்தது.…

மேலும் வாசிக்க

பெற்றோருக்காய் ஒரு நிமிடம்..!

Fayasa Fasil தாயின் கருவறையில் பத்திரமாய் பவ்வியமாய் ஒரு சிசு வளர்கிறது நிம்மதியான உறக்கம் கொண்டு தன் செயற்பாட்டை அமைத்துக் கொண்டு செயல்படுகிறது. வெளியுலகை எட்டிப் பார்க்கும்…

மேலும் வாசிக்க

மன்னிப்பின் மாதம்

இரண்டு வயது ஆண் குழந்தைஅய்லன் ரூமி…மலப்புறம் (India) மாவட்டத்தை சேர்ந்தசர்புதீன் - சஃப்னா தம்பதியர் மகன்..இருவருக்கும் திருமணம் முடிந்துஎட்டு ஆண்டுகள் கழித்து பிறந்தவன் என்பதால் ஒட்டுமொத்த குடும்பமும்…

மேலும் வாசிக்க

Fiverr வீட்டில் இருந்தவாரே டொலர் மழையில் குளிக்கலாம்!

இன்றைய காலத்தில் பணம் என்பது எவ்வளவு முக்கியம் என்று நான் சொல்லித்தான் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவசியம் கிடையாது. இல்லானை இல்லத்தவளும் வேண்டாத.. ஈன்றெடுத்த…

மேலும் வாசிக்க

எமது WhatsApp / Telegram குழுவில் சேருங்கள்

புதிய கதைகள், போட்டி அறிவிப்புகள், சிறப்பு பதிவுகள் – நேராக உங்கள் மொபைலில் உடனுக்குடன்.

பதிவுகளை தேட

முக்கிய இணைப்புகள்

  • சிறுகதை
  • கட்டுரைகள்
  • சுயவிவரம் / எழுத்தாளர்கள்
  • வீடியோக்கள்
  • அறிவித்தல்கள்

நீங்களும் எழுதலாம்..

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்தாளரை உலகிற்கு அடையாளம் காட்டுங்கள். உங்கள் ஆக்கபூர்வமான கட்டுரைகளை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இன்றே இணையுங்கள்.

மேலும் அறிய எங்களை அணுகவும்.

கவித்துளி

அடுத்து வாசிக்க

எங்களைப் பற்றி

இதர பக்கங்கள்

தொடர்பு கொள்ள