
அத்தியாயம் 01 இன்னும் நிலா தூங்கவில்லை. அம்னாவும் தூங்கவில்iலை. அந்தி நேர அடிவானில் ஒட்டப்பட்டிருந்த ஒற்றை நட்சத்திரம் சிநேகமாகச் சிரித்தது. தொலைதூர அடர்ந்த காடுகளில் இருந்து மேலெழும்பிய மின்மினிகள் புதர்க் காடுகளுக்குள் புகுந்து எதையோ வெகு சீரியஸாக தேடிக் கொண்டிருந்தன. மெல்லிய தென்றலின் மெதுவான வருடல் மேனிக்கு இதம் தந்தது. பக்கத்துக் கட்டிடம்தான் பாண் பேக்கரி. அங்கிருந்து அலை பாய்ந்து வரும் கருகலற்ற முறுவல் வாசம் அம்னாவின் நாசிக்குள் நுழைந்து உயிருக்குள் ஊடுறுவி அவளது சுவை நரம்புகளை

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு Student Publication நடாத்தும் பிரம்மாண்ட வினா விடை போட்டி ! 30 நாட்கள் 30 வினாக்கள் மற்றும் பெறுமதி வாய்ந்த பரிசில்கள் வெற்றியாளர்களுக்காக காத்திருக்கின்றன. கூகுள் படிவம் (Google Form) வாயிலாக உங்கள் அறிவை சோதிக்க ஒரு அறிய வாய்ப்பு.தினமும் பகல் 12.00 மணி முதல் 1.00 மணிக்குள் வினாக்கள் வெளியிடப்படும். மேலதிக தகவல்களுக்கு 0722558800

புத்தகம் எழுதுவது எவ்வாறு? நீண்ட நாட்களாக பலரும் கேட்கின்ற கேள்வி ஒன்று இருக்கின்றது. அது புத்தகம் எழுதுவது எவ்வாறு என்று.. நானும் என்னால் முடிந்த அளவில் பொருத்தமான பதில்களை வழங்கியுள்ளேன். சிலர் விடாப்பிடியாக என்னைப் பிடித்து இரண்டு மூன்று புத்தகங்களை எழுதிவிட்டனர். இன்னும் சிலர் இரண்டு மூன்று கேள்விகளோடு காணாமல் போய்விட்டனர். இப்போது கொஞ்சம் ஓய்வு கிடைத்திருக்கின்றது. புத்தகம் எழுதுவது எவ்வாறு என்று எனக்குத் தெரிந்த சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். எழுத்து

ரமழான் எட்டிப் பார்த்திருக்கின்றது. இந்த நாட்களில் எவ்வாறு நாம் இந்த அழகிய நாட்களை பயன்படுத்தலாம் என்று ஆயிரம் திட்டங்களைத் தீட்டியிருப்போம். இதே நேரத்தில் எமது குழந்தைகளுடன் எவ்வாறு அந்த அற்புத நாட்களை அழகிய முறையில் கழிக்கலாம் என்பது பற்றிய சில கதையாடல்களைத் தருகின்றோம்.

எமது குழந்தைகளுக்கு நாம் வழங்கும் ஆகச்சிறந்த பரிசு என்னவென்று கேட்டால் சந்தேகமேயில்லை. அவை, சிறந்த புத்தகங்கள்தான். அதுவும், அவர்களின் வெள்ளை மனதுகளில் அல்லாஹ், அண்ணலார், அல்குர்ஆன் பற்றிய அறிமுகங்களை ஆழமாக பதித்தால் அவர்களது வாழ்வும் அர்த்தமுள்ளதாக இருக்கும். அந்த வரிசையில்… சிறுவர்களுக்கு பல பயனுள்ள புத்தகங்களை வெளியிட்டிருக்கும் நபீல் அபாபீல் அவர்களின் ‘என் அல்லாஹ்விற்கு என்ன பிடிக்கும்!’ என்ற நூல் இம்முறை ரமழானுக்கான சிறப்பிதழாக வந்துள்ளது. அல்லாஹ் அன்பாளன், அல்லாஹ் அருட்கொடையாளன் என ஆரம்பிக்கும் அத்தியாயங்கள் இறுதியாக

ஒருவரை உண்மையாக நேசிப்பதற்கான வழிகளில் மிகப் பொருத்தமானது அவரை அறிந்துகொள்வதாகும்.அன்பின் அல்லாஹ் பற்றி எங்களுக்கு ஏகப்பட்ட விசயங்கள் தெரியும். சிறு வயதுகளில் எமது பெற்றோர்கள் அல்லாஹ்வைப் பற்றி பல விடயங்களை சொல்லித் தந்திருப்பார்கள். பாடசாலைப் புத்தகங்களிலும் இன்னும் பல வாசிப்புப் புத்தகங்களிலும் அல்லாஹ்வைப் பற்றி அதிகம் வாசித்திருப்போம். உரைகளும் சொற்பொழிவுகளும் ஆசிரியர்களின் அறிவுரைகளும் நமக்கு அல்லாஹ்வைப் பற்றி கற்றுத் தந்திருக்கும்.இவை தவிர.. அல்லாஹ்வைப் பற்றி இன்னும் அதிகமாக அறிந்துகொள்ள சில அற்புத வழிகள் இருக்கின்றன. அல்லாஹ்வின் அழகிய

படைப்பாற்றல் மிக்க எழுத்தாளர்களையும் ஆர்வமுள்ள வாசகர்களையும் இணைக்கும் ஒரு நவீன இலக்கியப் பாலம். உங்கள் எண்ணங்களுக்கு உயிர் கொடுக்க தளம் வாய்ஸ் தயாராக உள்ளது
© 2026 Thalamvoice. All rights reserved. Powered by IdeaBulb