February 24, 2026

இது உங்களின் குரல்களுக்கான தளம்

2026 – ஒரே நாளில் Passport எடுப்பது எப்படி? (One Day Service)

2–4 minutes

ஒரு காலத்தில் எழுதப் படிக்கத் தெரியாதவர்களை விசித்திரமாக பார்ப்பது போன்று இன்று பாஸ்போர்ட் (Passport) இல்லாதவர்களை விநோதமாக பார்க்கும் வழக்கம் தோன்றியிருக்கின்றது. அதிலும் குறிப்பாக ஒரு நாளில் பாஸ்போர்ட் (One Day Service)  எடுப்பது பற்றி நிறைய குழப்பங்கள் இப்போதும் நிலவுகின்றன. ஆகவே, அது பற்றி சில தெளிவுகள் இங்கு முழுமையாக வழங்கப்படுகின்றன.

இலங்கையில் பாஸ்போர்ட் (Passport)  பெறுவதற்கு பல பிராந்தியங்கள் இருந்தாலும் ஒரே நாளில் பெற்றுக் கொள்ள (One Day Service)  நாம் கொழும்புக்கு வரவேண்டும். பத்தரமுல்ல (Battaramulla)  சுஹுருபாய தலைமையத்தில் மாத்திரமே நாம் இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.

2026 ஆம் ஆண்டின் புதிய விதிகளின் படி இது முற்றிலும் இலகுவான ஒரு விடயமாகும். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் (Department of Immigration and Emigration)  புதிய விதிகள் இங்கு உங்களுக்காக முன்வைக்கப்பட்டுள்ளன. இங்கு நீங்கள் காலை 7.00 மணி முதல் பிற்பகல் 1.30 வரை உங்களுக்கான விண்ணப்பங்களை ஒப்படைக்க முடியும்.

தேவைப்படும் முக்கிய ஆவணங்கள்

நீங்கள் விண்ணப்பிக்கச் செல்லும்போது பின்வரும் ஆவணங்களின் அசல்பிரதிகள் (0riginal) மற்றும் பிரதிகளை (photocopy) கைவசம் வைத்திருங்கள்.

1.        பிறப்புச் சான்றிதழ் : புதிய முறையில் கணினி மயப்படுத்தப்பட்ட (Computerized) பிறப்புச் சான்றிதழ் இருந்தால் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

2.        தேசிய அடையாள அட்டை (NIC)

3.        புகைப்பட ரசீது : அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டுடியோவில் (Authorized Photo Studio) உங்களுக்கான புகைப்படத்தை பதிவு செய்து அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ள முடியும். (பத்தரமுல்ல (Battaramulla)  அலுவலக வாசலில் கூட நூற்றுக்கணக்காக ஸ்டூடியோக்கள் அதிகாலையிலேயே திறந்திருப்பதைக் காணலாம்)

4.        பழைய பாஸ்போர்ட் – உங்களிடம் ஏற்கனவே ஒரு பாஸ்போர்ட் (Passport)  இருக்கின்றது என்றால் கட்டாயமாக அதை நீங்கள் கொண்டு வர வேண்டும்.

5.        தொழில் சான்றிதழ் – உங்கள் பாஸ்போர்ட்டில் உங்கள் தொழில் பதவியைக் குறிக்க வேண்டும் என்றால் வேலை செய்யும் இடத்தின் கடிதம் தேவைப்படும்.

2026 ஆம் ஆண்டுக்கான கட்டண விபரங்கள் (Fee)

ஒரு நாள் சேவை (One Day Service)  20 000 ரூபாய் (ஒரே நாளில் உங்களால் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்)

சாதாரண சேவை  10 000 ரூபாய்

(விண்ணப்பங்களை ஒப்படைத்து விட்டு வந்தால் உங்கள் வீடு தேடி (Passport)  வரும்)

விண்ணப்பிக்கும் முறை ((Step-by-Step Process))

1.        Online Appointment முதலில் நீங்கள் உங்களுக்கான திகதியை பதிவு செய்ய வேண்டும். குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் (Department of Immigration and Emigration)  இணையதளத்தில் (eservices.immigration.gov.lk) உங்களுக்கான நேரத்தை முன்பதிவு (Appointment) செய்ய வேண்டும்.

2.        Photo புகைப்பட ரசீது பெற்றுக் கொள்ளல்

அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டூடியோ சென்று புகைப்படம் எடுத்து அதன் ரசீதைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

3.        குறிப்பிட்ட நாள் பத்தரமுல்ல அலுவலகம் (Department of Immigration and Emigration)  சென்று ஆவணங்களை வழங்கி உங்கள் கைவிரல் அடையாளத்தை வழங்கிக் கொள்ளுங்கள்.

4.        உரிய கட்டணத்தைச் செலுத்தி 20000 ரசீதைப் பெற்றுக் கொள்ளுங்கள்

5.        அன்றே – அங்கே காத்திருந்து உங்கள் பாஸ்போர்ட்டை (Passport)  பெற்றுக் கொள்ளுங்கள்.

ஏமாறாதீர்கள்…

உங்களுக்குத் தேவையாயான அனைத்து வசதிகளும் பத்தரமுல்ல (Battaramulla)  அலுவலகத்திலேயே (Department of Immigration and Emigration)  பெற்றுக் கொள்ள முடியும். தற்போது நாம் ஒவ்வொரு கட்டத்தைத் தாண்டும்போதும் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என வீடீயோ காணொளிகள் (Video) அனைத்து இடங்களிலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. எமது ஆவணங்களை முறையாகப் பெற்றுக் கொண்டால், அலுவலகத்தின் ஒவ்வொரு படியிலும் அவர்கள் தரும் வழிகாட்டல்களை முறையாக பின்பற்றினால் ஒரு நாளில் பாஸ்போர்ட் எடுத்தல் (One Day Service) என்பது மிகவும் சர்வசாதாரண விடயம்தான்.

ஒரு சிலர் பாஸ்போர்ட் (Passport)  எடுக்க வேண்டும் என்றால் முதல் நாள் இரவே சென்று காத்திருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், அது தேவையற்றது. எமக்கான நாளை முன்கூட்டியே பதிவு செய்து விட்டு அந்த நாளின் காலையிலேயே சென்றால் மிக இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும். சிற்றுண்டிச் சாலைகள் தாரளமாக இருக்கின்றன. வரிசையில் சற்று நேரம் பொறுமையாக நிற்க வேண்டும் என்பதால் உங்களுக்குத் தேவையான தண்ணீர் போத்தல்களை எடுத்துக் கொள்வது சிறந்ததாகும்.

நீங்கள் செல்லும்போது நூற்றுக்கணக்கான நபர்கள் வரிசையில் இருப்பதைக் காணலாம். வரிசை மெதுமெதுவாக ஊர்ந்து கொண்டிருக்கும். சலித்துக் கொள்ளாமல் அதில் இணைந்து கொள்ளுங்கள். நீங்கள் தொலைதூரத்தில் இருந்து வருகின்றீர்கள் என்றால் வாகனங்களை பார்க் (Parking) செய்துகொள்ள முடியும். ஒரே நேரத்தில் சிறு கட்டணங்களை செலுத்தி ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கள்களையும் நிறுத்த முடியும். (வாகன பார்க்கிங் தனிப்பட்டவர்களால் செய்யப்படுகின்றது. அதற்கும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கும் (Department of Immigration and Emigration)  சம்பந்தம் இல்லை)

பத்தரமுல்ல (Battaramulla)  அழகிய பிரதேசமாகும். சற்று அருகிலேயே ஓய்வெடுக்கக் கூடிய வசதிகள் இருக்கின்றன. ஆனால், கொழும்பு என்பது அதிகாலையிலும் அந்திமாலையிலும் வாகன நெரிசல் கொண்ட பகுதி என்பதை மறந்து விடாதீர்கள். அதற்கேற்றவாறு உங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

நான் எனது ஒரு நாள் பாஸ்போர்ட் சேவைக்காக (One Day Service)  செல்லும்போது காலை ஆறு மணி இருக்கும். தேவையான ஆவணங்களையும் அவற்றில் பிரதிகளையும் (photo copy) வீட்டில் இருந்து கொண்டு சென்றதால் தாமதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், நீண்டிருக்கும் வரிசைகளை கண்டபோது சற்று மலைப்பாகத்தான் இருந்தது. ஒரு பக்கம் ஒரு நாள் சேவை. இன்னொரு பக்கம் சாதாரண சேவை, சற்றுத் தொலை அடையாள அட்டைக்கான சேவை என வரிசைகள் நீண்டிருந்தன. ஆனால், தேவையான வழிகாட்டல்கள் அனைத்தும் தாரளமாக கிடைத்தன. ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் தலையை தூக்கிப் பார்த்தால் தொலைக்காட்சித் திரையில் காணப்பிக்கப்பட்ட காணொளிகள் அவற்றை தெளிவு படுத்தின.

ஏமாற்றக் கூடியவர்கள் எங்கும் இருப்பார்கள். ஏமாறாமல் இருப்பது எமது கைகளில்தான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புள்ள எழுத்துக்கள்

ஸகாத்தை வாரி வழங்குவோம் வள்ளல்களாக மாறுவோம்

Fayasa Fasil இஸ்லாத்தின் கடமைகளில் மூன்றாவது கடமையை ஸகாத். ஸகாத் என்பது மொழியில் வளர்ச்சி ,தூய்மை , சீர்மை , பரக்கத் போன்ற பல கருத்துக்களை தருகின்றது.…

மேலும் வாசிக்க

நாவல் : ஒரே ஒரு மகள் (அத்தியாயம் 05)

திருமணம் முடிந்துவிட்டது. இரவாகிவிட்டது. தோழிகளின் கிண்டல் பார்வைகளையும் நக்கல் பேச்சுக்களையும் நையாண்டி சைககைகளையும் சகித்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள் அம்னா. கல்யாண பரபரப்பில் அஸ்ஜத்துடன் எதுவும் பேசக்…

மேலும் வாசிக்க

இலங்கையின் கல்வித்துறை – போட்டிப் பரீட்சைக்கான தகவல்கள் (01)

இலங்கையின் கல்வித் துறை பற்றி சில முக்கியமான தகவல்களை இந்த அத்தியாயம் முன் வைக்கின்றது. (01 - 100) பகுதி 1: இலங்கை கல்வித் துறையின் வரலாற்றுப்…

மேலும் வாசிக்க

தமிழ் என்றும் வாழும்

தமிழ் மொழியின் வரலாறு உலகின் மிகப் பழமையான மொழிகளில் முதன்மையானது தமிழ் மொழியாகும். அதேபோன்று காலத்திற்குக் காலம் ஏற்பட்ட அழிவுகள், போர்கள், ஆக்கிரமிப்புக்கள் அனைத்தையும் வென்று 'காலத்தை…

மேலும் வாசிக்க

நாவல் – ஒரே ஒரு மகள் (அத்தியாயம் 04)

அம்னாவுக்கு திருமணப் பேச்சு ஆரம்பமாகிவிட்டது. ஒரு பெண்ணின் வாழ்வில் திருப்புமுனையான அம்சம் திருமணம்தான். அது அற்புதமாய் அமைந்துவிட்டால் அதைவிட பெரிய அதிர்ஷ்டம் அவளுக்கு வாய்க்கப் போவதில்லை. அதில்…

மேலும் வாசிக்க

2026 – ஒரே நாளில் Passport எடுப்பது எப்படி? (One Day Service)

ஒரு காலத்தில் எழுதப் படிக்கத் தெரியாதவர்களை விசித்திரமாக பார்ப்பது போன்று இன்று பாஸ்போர்ட் (Passport) இல்லாதவர்களை விநோதமாக பார்க்கும் வழக்கம் தோன்றியிருக்கின்றது. அதிலும் குறிப்பாக ஒரு நாளில்…

மேலும் வாசிக்க

நாவல் – ஒரே ஒரு மகள் அத்தியாயம் 03

அம்னா பல்கலைக்கழகத்திலிருந்து வந்து ஒரு வாரம் கழிந்து விட்டது. இன்னும் வகுப்புக்கள் ஆரம்பிக்க பத்து நாட்கள் இருந்தன. அன்று அவளின் பிறந்த நாள். அந்தி சாய்ந்து கொண்டிருந்தது.…

மேலும் வாசிக்க

பெற்றோருக்காய் ஒரு நிமிடம்..!

Fayasa Fasil தாயின் கருவறையில் பத்திரமாய் பவ்வியமாய் ஒரு சிசு வளர்கிறது நிம்மதியான உறக்கம் கொண்டு தன் செயற்பாட்டை அமைத்துக் கொண்டு செயல்படுகிறது. வெளியுலகை எட்டிப் பார்க்கும்…

மேலும் வாசிக்க

மன்னிப்பின் மாதம்

இரண்டு வயது ஆண் குழந்தைஅய்லன் ரூமி…மலப்புறம் (India) மாவட்டத்தை சேர்ந்தசர்புதீன் - சஃப்னா தம்பதியர் மகன்..இருவருக்கும் திருமணம் முடிந்துஎட்டு ஆண்டுகள் கழித்து பிறந்தவன் என்பதால் ஒட்டுமொத்த குடும்பமும்…

மேலும் வாசிக்க

Fiverr வீட்டில் இருந்தவாரே டொலர் மழையில் குளிக்கலாம்!

இன்றைய காலத்தில் பணம் என்பது எவ்வளவு முக்கியம் என்று நான் சொல்லித்தான் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவசியம் கிடையாது. இல்லானை இல்லத்தவளும் வேண்டாத.. ஈன்றெடுத்த…

மேலும் வாசிக்க

எமது WhatsApp / Telegram குழுவில் சேருங்கள்

புதிய கதைகள், போட்டி அறிவிப்புகள், சிறப்பு பதிவுகள் – நேராக உங்கள் மொபைலில் உடனுக்குடன்.

பதிவுகளை தேட

முக்கிய இணைப்புகள்

  • சிறுகதை
  • கட்டுரைகள்
  • சுயவிவரம் / எழுத்தாளர்கள்
  • வீடியோக்கள்
  • அறிவித்தல்கள்

நீங்களும் எழுதலாம்..

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்தாளரை உலகிற்கு அடையாளம் காட்டுங்கள். உங்கள் ஆக்கபூர்வமான கட்டுரைகளை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இன்றே இணையுங்கள்.

மேலும் அறிய எங்களை அணுகவும்.

கவித்துளி

அடுத்து வாசிக்க

எங்களைப் பற்றி

இதர பக்கங்கள்

தொடர்பு கொள்ள