Fayasa Fasil
இஸ்லாத்தின் கடமைகளில் மூன்றாவது கடமையை ஸகாத். ஸகாத் என்பது மொழியில் வளர்ச்சி ,தூய்மை , சீர்மை , பரக்கத் போன்ற பல கருத்துக்களை தருகின்றது. ஜகாத் என்பது நன்மையை எதிர்பார்த்து செய்யப்படுகின்ற பணத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு இபாதத்.
இது சமூகத்தின் பணக்காரர்களிடமிருந்து பெறப்பட்டு அந்த சமூகத்தின் ஏழைகளுக்கு வழங்கப்படுவதாகும் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள்.
"தொழுகையை நிலை நாட்டுங்கள் ஸகாத்தையும் கொடுத்து வாருங்கள்.."
( பகரா 43 )
இந்த அல்குர்ஆன் வசனத்தின் மூலம் தொழுகை எந்த அளவுக்கு முக்கியமாய் கருதப்படுகின்றதோ அந்த அளவுக்கு ஸகாத் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
ஒரு பயிரை நட்டு அது பல மடங்காக பல்கிப் பெருகி விளைச்சல் தருவது போலவே அல்லாஹ்விற்காக வேண்டி நாம் செய்யும் தான தர்மமானது பல்கிப் பெருகி பல மடங்காக விளைவை தருகின்றது.
ஸகாத்தின் நோக்கங்களாக :
- வறுமையை ஒழித்தல்
- தூய்மைப்படுத்துதல்
- அபிவிருத்தி
போன்ற பல கருத்துக்களை தந்தாலும் சமூகத்தில் உள்ள பாரிய பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும். தனி மனிதனும் சுய கௌரவத்துடனும் , மரியாதையுடனும் வாழ வேண்டும். என்ற பிற காரணிகளும் நோக்கப்படுகின்றன..
ஸகாத்தினை உரிய முறையில் நிறைவேற்றி , அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்து பயன் பல பெறுவோம்.




Leave a Reply